பண்ருட்டியில் மாற்றுக் கட்சியினர் அதிமுகவில் இணைந்தனர் !
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் மாநில மகளிர் அணி துணை செயலாளருமான சத்யா பன்னீர்செல்வம் முன்னிலையில் மாற்று கட்சியிலிருந்து விலகி ஸ்டிக்கர் மோகன் தலைமையில் பேண்ட் வாத்தியங்கள் முழங்க ஊர்வலமாக வந்து 500க்கும் மேற்பட்டோர் தங்களை அதிமுக கட்சியில் இணைத்துக் கொண்டார்கள். அதனைத் தொடர்ந்து கட்சியில் இணைந்த அனைவருக்கும் சால்வை அணிவித்து வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்
கருத்துகள்
கருத்துரையிடுக