குளித்தலையில் மும்மொழி கொள்கை தொகுதி மறுசீரமைப்பு என்ற மத்திய அரசின் நிலைப்பாட்டை கண்டித்து அமைச்சர். செந்தில் பாலாஜி தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்!


கரூர் மாவட்டம் தமிழ்நாடு போராடும், தமிழ்நாடு வெல்லும் இதுவே நம் இலக்கு என எட்டுத்திக்கும் எதிரொலிக்க உரக்க முழங்கிய மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு‌.க ஸ்டாலின் அவர்களின் ஆணைக்கிணங்க, கரூர் மாவட்ட திமுக கழகத்தின் சார்பில், தொகுதி மறுசீரமைப்பு என்ற பெயரில் நாடாளுமன்ற தொகுதி குறைப்பு, மும்மொழிக் கொள்கை என்ற பெயரில் இந்தி திணிப்பு என தமிழ்நாட்டை அழிக்க நினைக்கும் மத்திய அரசை கண்டித்து, கரூர் மாவட்டம் குளித்தலையில், கழக செய்தி தொடர்பு இணைச் செயலாளர். தமிழன் பிரசன்னா அவர்கள் முன்னிலையில் மாபெரும் கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்றது. 

இதில் சிறப்பு அழைப்பாளராக மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைதுறை அமைச்சரும், கரூர் மாவட்ட செயலாளருமான. செந்தில் பாலாஜி அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். 

இக்கூட்டத்தில், சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள், கரூர் மாவட்ட மாநகர, பகுதி, நகரம், ஒன்றிய, பேரூர், வட்ட, கிளைக் கழக நிர்வாகிகள், கழகத் தொண்டர்கள் மற்றும்  பொதுமக்கள் இதில் கலந்து கொண்டனர்.

கரூர் மாவட்ட செய்தியாளர் சக்திவேல்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!