எடப்பாடி கே. பழனிச்சாமி அவர்களின் தலைமையில் உலக மகளிர் தின விழா கொண்டாட்டம்!
சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு சென்னை, ராயப்பேட்டை அவ்வை சண்முகம் சாலையில் உள்ள தலைமைக் கழக புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். மாளிகையில் இன்று (8.3:2025 சனிக் கிழமை) மாண்புமிகு கழகப் பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிச்சாமி அவர்களின் தலைமையில் கேக் வெட்டி, ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவி மற்றும் அன்னதானம் வழங்கி சிறப்பாக கொண்டாடப்பட்டது.
இதில் கழக மகளிர் அணி செயளாலரும், முன்னாள் அமைச்சருமான. வளர்மதி, கழக மகளிர் அணி இணைச்செயலாளர். கிர்த்திகா முனியசாமி மற்றும் கழக மகளிர் அணி நிர்வாகிகள் இதில் கலந்து கொண்டுள்ளார்.



கருத்துகள்
கருத்துரையிடுக