கரூரில் இஃப்தார் நோன்பு திறக்கும் விழாவில் அமைச்சர். செந்தில் பாலாஜி பங்கேற்பு!
கரூர் மாவட்டம் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் மற்றும் மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர். உதயநிதி ஸ்டாலின் அவர்களின் வழிகாட்டுதலின்படி கரூரில் இஃப்தார் நோன்பு திறக்கும் விழா வெகு விமர்சையாக நடைபெற்றது.
இதில் சிறப்பு அழைப்பாளராக மின்துறை மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைதுறை அமைச்சர். செந்தில் பாலாஜி அவர்கள் இஃப்தார் நோன்பில் கலந்து கொண்டு சிறப்பித்தார். கரூர் அத்தார் ஜமாத் ஈத்கா பள்ளிவாசலில் நடைபெற்ற இந்த நிகழ்வில், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள், திமுக கழக நிர்வாகிகள் மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்துக் கொண்டனர்.
கரூர் மாவட்ட செய்தியாளர் சக்திவேல்



கருத்துகள்
கருத்துரையிடுக