கடலூர் - பண்ருட்டி நகர மன்ற தலைவர் ராஜேந்திரன் தலைமையில் நடைபெற்ற ஆலோசனை கூட்டம்!
கடலூர் மாவட்டம் பண்ருட்டி நகராட்சி அலுவலகத்தில் நேற்று 22.3.2025 நகர மன்ற தலைவர் நகர கழக செயலாளர் திரு க.இராஜேந்திரன் அவர்கள் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. பில் கலெக்டர்கள் பணியாளர்கள் மற்றும் ஊழியர்கள் வரி வசூலுக்கு செல்லும் போது பொதுமக்களிடம் கனிவான முறையில் வரி வசூல் செய்ய வேண்டும் பண்ருட்டி நகராட்சியில் சொத்து வரி உள்ளிட்ட வரிகள் அதிக அளவில் பாக்கி உள்ளதால் 100% வரி வசூல் செய்தால் தான் மத்திய மாநில அரசுகளிடம் இருந்து நமக்கு
தேவையான அனைத்து திட்டங்களுக்கான நிதிகளை கேட்டு பெற முடியும் வரி வசூலுக்கு செல்லும்போது பொதுமக்களிடம் கனிவான முறையில் பேசி மார்ச் 31-க்குள் வரி பாக்கி செலுத்தி நமக்கு தேவையான நல்ல பல திட்டங்களை செயல்படுத்த உதவுங்கள் என கூறி வரி பாக்கி வசூல் செய்ய வேண்டும் பொதுமக்களிடம் கடுமையான முறையில் நடந்து கொள்ள வேண்டும் என கேட்டுக்கொண்டார். உடன் நகராட்சி ஆணையாளர் (பொறுப்பு)கண்ணன், மேலாளர். காதர் கான், உதவி பொறியாளர் கார்த்திகேயன், வருவாய் ஆய்வாளர். அசோக் நகராட்சியில் கலெக்டர்கள் கலந்து கொண்டனர்.
கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்


கருத்துகள்
கருத்துரையிடுக