காதணி விழாவில் பங்கேற்க எடப்பாடியார்க்கு உடுமலையார் அழைப்பு!
சேலம் மாவட்டம் மாண்புமிகு முன்னாள் முதல்வரும், தமிழக எதிர்க்கட்சித் தலைவரும், அஇஅதிமுக கழக பொது செயலாளருமான எடப்பாடி கே.பழனிசாமி அவர்களை சேலம் எடப்பாடியாரின் இல்லத்தில் பேத்தியின் காதணி விழாவில் கலந்து கொள்ள உடுமலை கே. ராதாகிருஷ்ணன் அவர்கள் நேரில் சென்று அழைப்பு! மழலை செல்வம்
மகிழினி ஆதித்யா அவர்களின் காதணிவிழா பொள்ளாச்சி ஊஞ்சலாம்பட்டி தி வேல் திருமண மண்டபத்தில் (25.5.2025) தங்கள் தலைமையில் நடைபெற உள்ளதால் தாங்கள் குடும்பத்துடன் வருகைதந்து ஆசி வழங்குமாறு உடுமலையார் காதணி விழா அழைப்பிதழை வழங்கினார்.
இதில் உடுமலையாரின் குடும்பத்தார்களும் ஆர்.கிருஷ்ணபிருந்தா ராதாகிருஷ்ணன், எஸ்.ரேணுகாதேவி செல்வராஜ், எஸ். விஜயகுமார், கோவை புறநகர் தெற்கு மாவட்ட அம்மா பேரவை செயலாளரும், முன்னாள் பொள்ளாச்சி நகர துணை தலைவருமான வி. கனகவல்லி அன்பு, குழந்தையின் தாய் தந்தை. ஆதித்யன் விஜயகுமார், ஜெயபிரனிதா ஆதித்யன் ஆகியோர் உடன் இருந்தனர்.



கருத்துகள்
கருத்துரையிடுக