கடலூரில் ஜெயக்குமார் ஐபிஎஸ் அவர்கள் மேற்பார்வையில் ஆயுதப்படை காவலர்களுக்கு வாராந்திர கவாத்து!


கடலூர் மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில், ஆயுதப்படை காவலர்களின் வாராந்திர கவாத்து நடைபெற்றது. கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் IPS அவர்கள் மேற்பார்வையில் காவலர்களுக்கு ஏற்படும் தற்காலிக உடல்நிலை பாதிப்புகளில் இருந்து உடலை பாதுகாக்க பிசியோதெரபி மூலம் தோள்பட்டை வலி, முதுகு வலி, காலில் ஏற்படும் வெரிக்கோஸ் போன்ற பாதிப்புகளிலிருந்து தற்காத்து கொள்வது குறித்து பயிற்சிகள் அளிக்கப்பட்டது. 


இதில் ஆயுதப்படை துணை காவல் கண்காணிப்பாளர். அப்பாண்டைராஜ், ஆயுதப்படை ஆய்வாளர். அருட்செல்வன், ஆயுதப்படை உதவி ஆய்வாளர்கள், தலைமை காவலர்கள், காவலர்கள் பங்கேற்றனர். அனைத்து காவலர்களுக்கும் டிராவல் பேக் காவல் கண்காணிப்பாளர் வழங்கி, வாழ்த்து தெரிவித்தார்.

கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!