செஞ்சி அருகே ஜம்போதி கிராம மக்கள் குடிமனை பட்டா வழங்கக்கோரி கவன ஈர்ப்பு போராட்டம்!
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே ஜம்போதி கிராமத்தில் 300க்கும் மேற்பட்ட பட்டியல் இன மக்கள் வசிக்கும் பகுதி குறுகிய நிலப்பரப்பில் அடர்த்தியாக வசிப்பதால், மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி, மேற்படி ஊரில் உள்ள 8 ஏக்கர் புறம்போக்கு நிலத்தை மீட்டு குடிமனை பட்டா வழங்கக்கோரி மாவட்ட ஆட்சியர் இடம் பலமுறை மனு அளித்தும் மாவட்ட நிர்வாகம்,செஞ்சி தனி வட்டாட்சியர் மற்றும் வட்டாட்சியரின் அலட்சியப் போக்கால் இரண்டு ஆண்டுகளுக்கு மேலாகியும் குடிமனை பட்டா வழங்காததால்,
நூற்றுக்கணக்கான பெண்களுடன், அரசின் அடையாள அட்டைகளான ஆதார் கார்டு, ரேஷன் கார்டு, வாக்காளர் அட்டை உள்ளிட்டவைகளை ஒப்படைத்து கவனத்தை ஈர்க்கும் போராட்டம் நடைபெற்றது.
விழுப்புரம் மாவட்ட செய்தியாளர் விஜய்


கருத்துகள்
கருத்துரையிடுக