கடலூர் மாவட்ட தனிப்பிரிவு காவல் அதிகாரிகள் மற்றும் காவலர்கள் ஆலோசனை கூட்டம் ஜெயக்குமார் ஐபிஎஸ் பங்கேற்பு!
கடலூர் மாவட்டம் காவல் அலுவலகத்தில் தனிப்பிரிவு காவல் அதிகாரிகள் மற்றும் காவலர்களின் கூட்டம் நடைபெற்றது. கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் S. ஜெயக்குமார் IPS அவர்கள் தனிப்பிரிவு காவல் அதிகாரிகள் மற்றும் காவலர்களிடம் கலந்தாய்வு மேற்கொண்டு அறிவுரை வழங்கினார்.
கடலூர் மாவட்ட தனிப்பிரிவில் சிறப்பாக செயல்பட்டு மெச்ச தகுந்த பணிபுரிந்த நெய்வேலி நகர் தனிப்பிரிவு முதல் நிலை காவலர் திரு. செந்தில்குமார், திட்டக்குடி தனிப்பிரிவு முதல் நிலை காவலர் திரு. சுதாகர் ஆகியோர்களின் பணியினை பாராட்டி பாராட்டு சான்றிதழ், பரிசு வழங்கி கௌரவித்தார்.
கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்


கருத்துகள்
கருத்துரையிடுக