கோவில் திருவிழாவில் இரு சமூகத்தினரின் இடையே ஏற்பட்ட பிரச்சனையில் சமரசம் செய்து வைத்த மாவட்ட கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் ஐபிஎஸ்!
கடலூர் மாவட்டம் குமராட்சி காவல் நிலைய சரகத்தில் கோயில் திருவிழாவின்போது இரு சமூக மக்களிடையே ஏற்பட்ட பிரச்சனையை தொடர்ந்து, கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. S. ஜெயக்குமார் IPS அவர்கள் பிரச்சனை ஏற்பட்ட பகுதியினை நேரில் பார்வையிட்டு, விசாரணை மேற்கொண்டார்.
தொடர்ந்து அப்பகுதியில் அமைதியான சூழல் ஏற்பட, இரு சமுதாய முக்கிய பிரமுகர்களிடையே பிரச்சனை தொடர்பாக அமைதி பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு.N.கோடீஸ்வரன் அவர்கள் உடன் இருந்தார்.
கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்


கருத்துகள்
கருத்துரையிடுக