கடலூர் - துப்பாக்கி குண்டு சுடும் போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற காவலருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் ஐபிஎஸ் அவர்கள் வாழ்த்து!
கடலூர் மாவட்டம் ஆயுதப்படை காவலர் வெங்கடகிருஷ்ணராவ் (PC 726 ) என்பவர் திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு கமாண்டோ பயிற்சி பள்ளியில் 8 வார காலம் கமாண்டோ பயிற்சியில் பங்கேற்றார். கமாண்டோ பயிற்சி துப்பாக்கி குண்டு சுடும் போட்டியில் முதலிடம் பிடித்து தங்கப்பதக்கம் வென்றார்.
பதக்கம் வென்ற காவலர் வெங்கடகிருஷ்ணாராவ் அவர்களை கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் S. ஜெயக்குமார் IPS அவர்கள் பாராட்டி வாழ்த்து தெரிவித்தார்.
கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்


கருத்துகள்
கருத்துரையிடுக