கடலூர் பூண்டியாங்குப்பம் நெடுஞ்சாலையில் சாலை விபத்தில் அடிப்பட்டு கிடந்த ராஜேஷ் என்பவரை காப்பாற்றிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் ஐபிஎஸ்!
கடலூர் மாவட்டம் கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் S ஜெயக்குமார் IPS அவர்கள் கடலூரிலிருந்து மாலை ரோந்து பணியாக குறிஞ்சிப்பாடி, குள்ளஞ்சாவடி, ஆலப்பாக்கம் வழியாக பூண்டியாங்குப்பம் நெடுஞ்சாலையில் வந்து கொண்டிருந்தபோது சாலை விபத்தில்
அடிபட்டு கிடந்த தம்பிபேட்டை ராஜேஷ் வயது 32 என்பவரை கண்டவுடன் வாகனத்தை நிறுத்தி அதி விரைவு படை வீரர்கள் மூலம் 108 ஆம்புலன்ஸ்க்கு தகவல் கொடுத்து, பின்னர் காயம்பட்டு கிடந்த நபரின் உயிரை காக்கும் பொருட்டு காயம்பட்ட நபரை பத்திரமாக தூக்கி வந்து 108 ஆம்புலன்ஸ் ஏற்றி மருத்துவ சிகிச்சைக்கு அனுப்பி வைத்தார்.
கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்


கருத்துகள்
கருத்துரையிடுக