பண்ருட்டி பகுதிகளில் தவறவிட்ட செல்போன்களை உரியவர்களிடம் ஒப்படைத்த துணை கண்காணிப்பாளர் ராஜா
கடலூர் மாவட்டம்
பண்ருட்டி பகுதிகளில் செல்போன் தவறவிட்டது புகார் சம்பந்தமாக பண்ருட்டி துணை காவல் கண்காணிப்பாளர் திரு. ராஜா அவர்களின் உத்தரவின்பேரில் காவல் ஆய்வாளர் திரு. வேலுமணி அவர்கள் தலைமையில், உதவி ஆய்வாளர் திரு. தங்கவேலு மற்றும் போலீசார் விசாரணை மேற்கொண்டு காணாமல் போன 15
நபர்களின் செல்போன்களை கண்டுபிடித்து உரியவர்களை வரவழைத்து பண்ருட்டி துணை காவல் கண்காணிப்பாளர் திரு ராஜா அவர்கள் உரியவர்களிடம் செல்போன்களை ஒப்படைத்தார். காணாமல் போன 15 செல்போன்களை கண்டுபிடித்து கொடுத்த பண்ருட்டி காவல்துறையினரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. S. ஜெயக்குமார் IPS அவர்கள் பாராட்டினார்.
-கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்
கருத்துகள்
கருத்துரையிடுக