பண்ருட்டியில் கலை மற்றும் அறிவியல் கல்லூரி அறிவிப்பிற்கு உயர் கல்வித்துறை அமைச்சர் அவர்களை சட்டப்பேரவை வளாகத்தில் சந்தித்து நன்றி தெரிவித்த தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர். வேல்முருகன்!
தமிழ்நாடு சட்டமன்றத்தில் கடந்த 2021 ஆம் ஆண்டு முதல் தற்போது வரை எனது நான்காண்டுகால கோரிக்கையான பண்ருட்டி சட்டமன்ற தொகுதியில் கலை மற்றும் அறிவியல் கல்லூரி அமைக்கப்பட வேண்டும் என்கின்ற எனது கோரிக்கையினை ஏற்று மாண்புமிகு
தமிழ்நாடு முதல்வர் அவர்களால் அறிவிக்கப்பட்ட பண்ருட்டி தொகுதிக்கு கலை மற்றும் அறிவியல் கல்லூரி அறிவிப்பிற்கு உறுதுணையாக இருந்த மாண்புமிகு உயர் கல்வித் துறை அமைச்சர் அவர்களை சட்டப்பேரவை வளாகத்தில் சந்தித்து நன்றி தெரிவித்தார்.
கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்


கருத்துகள்
கருத்துரையிடுக