ராஜபாளையம் தொகுதியில் அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி அமைக்க வேண்டி தமிழக முதல்வருக்கு ராஜபாளையம் எம்.எல்.ஏ தங்கப்பாண்டியன் கோரிக்கை!
சென்னை தலைமை செயலகத்தில் (19.03.2025) மதியம் இராஜபாளையம் தொகுதியில் புதியதாக அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி அமைக்க வேண்டி, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களிடம் இராஜபாளையம் சட்டமன்ற உறுப்பினர் S.தங்கப்பாண்டியன்.,MLA அவர்கள் கோரிக்கை மனுவை வழங்கினார், இம்மனுவை பெற்றுக்கொண்ட மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் மனுவை பரிசீலிப்பதாக கூறினார்.
மேலும் இராஜபாளையம் தொகுதியில் புதிய அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி அமைப்பதற்கு நமது மாவட்டத்திலுள்ள மாண்புமிகு வருவாய்த்துறை அமைச்சர் அவர்களும், மாண்புமிகு நிதித்துறை அமைச்சர் அவர்களும் முயற்சி மேற்கொண்டு வருகிறார்கள் என்பதை இராஜபாளையம் தொகுதி பொதுமக்களுக்கு தகவலை தெரிவித்தார் ராஜபாளையம் எம்.எல்.ஏ தங்கப்பாண்டியன்.


கருத்துகள்
கருத்துரையிடுக