கடலூரில் மூன்றாம் ஆண்டு புத்தக கண்காட்சி தொடக்க விழா!
கடலூர் மாவட்டம் மஞ்சக்குப்பம் மைதானத்தில் மாவட்ட நிர்வாகம் மற்றும் தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர்கள் சங்கம் (பபாசி) இணைந்து நடத்தும், மாபெரும் 3ஆவது புத்தகத் திருவிழாவின் தொடக்க விழா நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளர்களாக மாண்புமிகு உழவன் மற்றும் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம், மாண்புமிகு தொழில் மேம்பாட்டுத்துறை அமைச்சர். CV கணேசன் அவர்களுடன் இணைந்து நேற்று (22.03.2025) துவக்கி வைத்து அங்கு அமைக்கப்பட்டிருந்த புத்தக மற்றும் 3D,V.R அரங்குகளை பார்வையிட்டனர்.
இந்த நிகழ்வில் மாவட்ட ஆட்சித்தலைவர். சிபி ஆதித்யா செந்தில்குமார் இ.ஆ.ப. கடலூர் நாடாளுமன்ற உறுப்பினர் Dr. MK விஷ்ணு பிரசாத், கடலூர் சட்டமன்ற உறுப்பினர் ஐயப்பன் MLA நெய்வேலி சட்டமன்ற உறுப்பினர். சபா ராஜேந்திரன் மாநகராட்சி மேயர் சுந்தரிராஜா, துணை மேயர் பா.தாமரைச்செல்வன், தென்னிந்திய புத்தக விற்பனையாளர் (ம) பதிப்பாளர் சங்கம் (கவிதா பப்ளிகேஷன்) சேது.சொக்கலிங்கம், மாவட்ட காவல்
கண்காணிப்பாளர் எஸ்.ஜெயக்குமார், மாவட்ட வருவாய் அலுவலர் ம.இராஜசேகரன், மாநகராட்சி ஆணையாளர் மரு.எஸ்.அனு இ.ஆ.ப, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் கூடுதல் ஆட்சியர் இரா.சரண்யா இ.ஆ.ப, உட்பட பள்ளி கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்டனர்.
கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்



கருத்துகள்
கருத்துரையிடுக