ராஜபாளையத்தில் ரூ. 1.88 கோடி மதிப்பீட்டில் புதியதாக கட்டப்பட்டுள்ள சார் பதிவாளர் அலுவலகத்தை தமிழக முதல்வர் காணொளி காட்சி வாயிலாக திறப்பு!
விருதுநகர் மாவட்டம் இராஜபாளையத்தில் ரூ.1.88 கோடி மதிப்பீட்டில் புதியதாக கட்டப்படுள்ள சார் பதிவாளர் அலுவலகத்தை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அவர்கள் காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.
அதனை தொடர்ந்து இராஜபாளையத்தில் சார் பதிவாளர் அலுவலகத்தில் தங்கப்பாண்டியன் MLA அவர்கள் குத்துவிளக்கு ஏற்றி சிறப்பித்தார். இந்நிகழ்வில் தமிழ்நாடு சீர்மரபினர் வாரிய துணைத்தலைவர். இராசா அருண்மொழி, நகர மன்ற தலைவர்.
பவித்ரா ஷியாம், நகர செயலாலர்கள். இராமமூர்த்தி, மணிகண்ட ராஜா, மாவட்ட பதிவாளர் (நிர்வாகம்) பூபதி, மாவட்ட பதிவாளர் (தணிக்கை) குணசேகரன், நகர்மன்ற துணைத்தலைவர். கல்பனா குழந்தைவேலு, முன்னாள் இராஜை ஊராட்சி ஒன்றிய துணைத்தலைவர். துரை கற்பகராஜ் மற்றும் கழக நிர்வாகிகள் இதில் கலந்து கொண்டனர்.




கருத்துகள்
கருத்துரையிடுக