காணொளி காட்சிகள் மூலம் முதலமைச்சர் திறந்து வைத்த பரங்கிப்பேட்டை ரிஜிஸ்டர் ஆபீஸ் அதைத்தொடர்ந்து குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்த பேரூராட்சி மன்ற தலைவர்!
கடலூரில் இருந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் கடலூர் மாவட்டத்திற்கு உட்பட்ட பகுதியில் காணொளி காட்சிகள் மூலம் பல்வேறு திட்டங்களை துவக்கி வைத்தார் அதில் ஒரு பகுதியாக பரங்கிப்பேட்டை கச்சேரி தெருவில் அமைக்கப்பட்டுள்ள புதிய சார்பதிவாளர் அலுவலகத்தை திறந்து வைத்தார் அதை தொடர்ந்து சார் பதிவாளர் பாலாஜி தலைமையில் கவுன்சிலர் டாக்டர் மரவாடி கோ.அருள்முருகன். அலுவலக உதவியாளர் நதியா ஆகியோர் முன்னிலை வகித்தனர் சிறப்பு அழைப்பாளராக பரங்கிப்பேட்டை பேரூராட்சி மன்ற தலைவர் தேன்மொழி சங்கர் கலந்துகண்டு அலுவலகத்தை ரிப்பன் வெட்டி குத்து விளக்கு ஏற்றி வைத்து துவக்கி வைத்தார்.
இதில் பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள் சரவணன்.பசிரியாமா ஜாபர் அலி.ரொகையாமா குன் முஹம்மது.ஜாஸ்மின் அஜீஸ்.ராஜேஸ்வரி வேல்முருகன் மற்றும் அலுவலக ஊழியர்கள். பேரூராட்சி மன்ற ஊழியர்கள். பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்
கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்


கருத்துகள்
கருத்துரையிடுக