மும்மொழி கொள்கையை எதிர்த்து வினோத் காந்தி தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம்!
ராணிப்பேட்டை மாவட்டம் ராணிப்பேட்டையில் மும்மொழி கொள்கையை எதிர்த்து மாநில சுற்றுச்சூழல் அணி துணைச் செயலாளர். ஆர். வினோத் காந்தி அவர்கள் தலைமையில், மாவட்ட மாணவர் அணி அமைப்பாளர் வினோத் அவர்கள் முன்னிலையில் மும்மொழி கொள்கையை எதிர்த்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் நெமிலி மேற்கு ஒன்றிய திமுக செயலாளர் ஆர்.பி ரவீந்திரன், நெமிலி மத்திய ஒன்றிய செயலாளர் எஸ்.ஜி.சி பெருமாள் மற்றும் கழக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

கருத்துகள்
கருத்துரையிடுக