திருப்புல்லாணியில் மத்திய ஒன்றிய அதிமுக செயலாளர் ராதாகிருஷ்ணன் அவர்கள் தலைமையில் நடைபெற்ற தகவல் தொழில்நுட்ப பணி குறித்த ஆலோசனைக் கூட்டம்!
ராமநாதபுரம் மாவட்டம் தமிழக முன்னாள் முதல்வர்கள். எம்.ஜி.ஆர் மற்றும் அம்மா ஆகிய இருபெரும் தலைவர்களின் நினைவோடு, கழகப் பொதுச் செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான முன்னாள் முதலமைச்சர், எடப்பாடி கே . பழனிச்சாமி அவர்களின் ஆணைக்கிணங்க, இராமநாதபுரம் மாவட்ட கழகச் செயலாளர். எம். ஏ. முனியசாமி அவர்களின் வழிகாட்டுதலின்படி, கழகத் தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர்.வி. வி. ஆர். ராஜ் சத்யன் அவர்கள் மற்றும் விருதுநகர் மண்டல தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் ஏ. சரவணகுமார் அவர்களின் ஆலோசனைப்படி, திருப்புல்லாணி மத்திய ஒன்றிய செயலாளர். ராதாகிருஷ்ணன் அவர்களின் தலைமையில். தகவல் தொழில்நுட்ப பிரிவு மாவட்ட செயலாளர். செ.நாகராஜன் ராஜா அவர்கள் தகவல் தொழில்நுட்ப பிரிவு ஒன்றிய நிர்வாகிகள் மற்றும் ஊராட்சி செயலாளர்கள் நியமனம் தொடர்பான ஆய்வு கூட்டம் மற்றும் அவர்கள் தகவல் தொழில்நுட்ப பிரிவில் எவ்வாறு செயல்பட வேண்டும் என்ற ஆலோசனை கூட்டம் திருப்புல்லாணியில் நடைபெற்றது.
இதில் தகவல் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகி முத்து முருகன் மற்றும் ஒன்றியத்தைச் சார்ந்த கழக முன்னோடிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்!


கருத்துகள்
கருத்துரையிடுக