ஆற்காடு - பேருந்து நிலையத்தில் முன்னாள் முதல்வர் ஜெ.ஜெயலலிதா அவர்களின் 77 வது பிறந்தநாள் விழா கொண்டாட்டம்!
ராணிப்பேட்டை மாவட்டம் அதிமுக முன்னாள் ஆற்காடு சட்டமன்றத் தொகுதி எம் எல்எ வி கே ஆர். சீனிவாசன் தலைமையில் ஆற்காடு பேருந்து நிலையத்தில் முன்னாள் முதல்வர் செல்வி ஜெயலலிதாவின் 77 வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.
இந்நிகழ்வில் ராணிப்பேட்டை கிழக்கு மாவட்ட செயலாளர் எஸ் எம். சுகுமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேருந்து நிலையத்தில் அலங்கரிக்கப்பட்டிருந்த ஜெயலலிதாவின் திருவுருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செய்தார்.
ஆற்காடு நகர செயலாளர் ஜிம் சங்கர், ஆட்டோ கண்ணன் மகளிர் அணியைச் சார்ந்த கீதா சுந்தர், ராதிகா உள்ளிட்ட நகர முன்னணி பொறுப்பாளர்கள், மாவட்ட, ஒன்றிய, கிளைக் கழக செயலாளர் ஏராளமானோர் கலந்து கொண்டு நிகழ்ச்சியிணை சிறப்பித்தனர் அதனை தொடர்ந்து அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது 5000 திற்க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு சிக்கன் பிரியாணி வழங்கினர்
ராணிப்பேட்டை மாவட்ட செய்தியாளர் ஆனந்த்



கருத்துகள்
கருத்துரையிடுக