பரங்கிப்பேட்டை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் நடைபெற்ற 123ஆம் ஆண்டு விழா !
கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டை கும்மத் பள்ளி தெருவில் அமைந்துள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி ஆனது கடந்த 1903 ஆம் ஆண்டு துவக்கப்பட்டு சிறப்பான முறையில் செயல்பட்டு வருகிறது இப்பள்ளியின் 123 ஆம் ஆண்டு விழா மிக விமர்சையாக பள்ளி வளாகத்தில் நடைபெற்றது இதற்கு 2 வது வார்டு கவுன்சிலர் பசிரியாமா ஜாபர் அலி தலைமை தாங்கினார் 6வது வார்டு கவுன்சிலர் ரொகையாமா குன் முஹம்மது .5 வது வார்டு கவுன்சிலர் ஜாபர் ஷெரீப்.பள்ளி கல்வியாளர் பாசித் ஆகியோர் முன்னிலை வகித்தனர் பள்ளி பொறுப்பு தலைமை ஆசிரியர் பாரதி வரவேற்புரை ஆற்றினார் பள்ளி ஆசிரியர் ஜினைதா மற்றும் பக்ருன்னிசா தொகுப்புரையாற்றினார் பள்ளி ஆண்டு விழாவில் பள்ளி மாணவ மாணவிகளுக்கு கபடி போட்டி.ஓவிய போட்டி.கட்டுரை போட்டி போன்ற பல்வேறு போட்டிகள் நடைபெற்றது போட்டியில் ஆர்வமுடன் மாணவர்கள் பங்கேற்றனர் போட்டியில் பங்கேற்று வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுப் பொருட்கள் வழங்கப்பட்டது இதில் மற்ற அரசு பள்ளி தலைமை ஆசிரியர்கள்.ஆசிரியர்கள்.பள்ளி ஆசிரியர்கள்.முன்னாள் மாணவர்கள். தன்னார்வலர்கள். பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள்.பெற்றோர்கள் பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர் முடிவில் ஆசிரியர் ராஜூ கலந்து கொண்ட அனைவருக்கும் நன்றி கூறினார்.
கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்

கருத்துகள்
கருத்துரையிடுக