குடியாத்தம் அருகே உரிய ஆவணம் இல்லாமல் எடுத்துச் சென்ற ரூபாய் 4 லட்சம் பறிமுதல்!!
வேலூர் மாவட்டம், குடியாத்தம் அடுத்த கல்லூர் பகுதியில் நிலைய கண்காணிப்பு குழுவினர். வட்டார வளர்ச்சி அலுவலர் உலகநாதன் தலைமையில் தலைமைக் காவலர் மணிகண்டன் பெண் காவலர். உஷா பர்வீன் ஆகியோர் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர் அப்போது அந்த வழியாக வந்த காரை தடுத்து நிறுத்தி சோதனை செய்ததில் ஆந்திர மாநிலம் . பலம்நேர். பகுதியில் இருந்து அப்துல் ரகுமான் என்பவர் திருமண நிகழ்ச்சிக்காக பொருட்களை வாங்க சுமார் 4. லட்சம் பணத்தை கொண்டு வந்துள்ளார். உரிய ஆவணம் இல்லாததால் பணத்தை. பறிமுதல் செய்து. குடியாத்தம் தலைமையிடத்து துணை வட்டாட்சியர் தனலட்சுமி அவர்களிடம் ஒப்படைத்தனர்.
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கேவி ராஜேந்திரன்.

கருத்துகள்
கருத்துரையிடுக