விழுப்புரத்தில் நடைபெற்ற காவலர் வீரவணக்க நாள்! ப. சரவணன் IPS பங்கேற்பு!!
விழுப்புரம் மாவட்டம், விழுப்புரம் மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில் காவலர் வீரவணக்க நாளான இன்று பணியின் போது உயிர் தியாகம் செய்து வீர மரணம் அடைந்த காவலர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக காவலர் நினைவு தூணிற்கு மலர் வளையம் வைத்து 21 குண்டுகள் முழங்க அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் விழுப்புரம் சரக காவல்துறை துணை தலைவர். உமா.இ.கா.ப., விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்.ப.சரவணன் இ.கா.ப., கூடுதல் காவல் கண்காணிப்பாளர். இளமுருகன் துணைக் காவல் கண்காணிப்பாளர்.
ஞானவேல், ஊர்காவல்படை மண்டல தளபதி. நத்தர்ஷா காவல் ஆய்வாளர்கள், காவல் உதவி ஆய்வாளர்கள், மற்றும் காவலர்கள் கலந்து கொண்டு கடந்த ஆண்டில் 2024-2025 தமிழ்நாட்டில் (6) இரண்டு காவல் உதவி ஆய்வாளர்கள், இரண்டு சிறப்பு காவல் உதவி ஆய்வாளர்கள், இரண்டு தலைமை காவலர்கள் உட்பட இந்தியாவில் 191 காவல் ஆளிநர்கள் பணியின்போது உயிர் தியாகம் செய்து வீர மரணம் அடைந்தவர்களுக்கு 21 குண்டுகள் முழங்க அஞ்சலி செலுத்தினார்கள்.
விழுப்புரம் மாவட்ட செய்தியாளர் விஜய்.



கருத்துகள்
கருத்துரையிடுக