மது போதையில் அட்ராசிட்டீஸ்!!

தேனி மாவட்டம், தேவதானப்பட்டி யில் பேருந்து நிலையம் முன் மக்கள் அதிகம் கூடும் இடத்தில் நேற்று சுதந்திர தினத்தை முன்னிட்டு அரசு மற்றும் தனியார் மதுபான கடைகள் மூட அரசு உத்தரவிடப்பட்டிருந்த போதும் இருவர் கள்ளச்சந்தையில் கிடைக்கும் மதுவை அருந்தி விட்டு ஆபாச வார்த்தைகள் பேசி அருகில் இருப்பவர்களை முகம் சுழிக்க வைத்துள்ளனர். பயணிகளுக்கு இடையூறு அளிக்கும் வகையில் அட்ராசிட்டியில் ஈடுபட்டுள்ளனர். இது போன்ற சம்பவத்தில் ஈடுபடுவோர் மீது காவல் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், மேலும்  சட்டவிரோத மாக மது விற்பனையில் ஈடுபடுவோர் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தேனி செய்தியாளர் சின்னதம்பி.

கருத்துகள்