விழுப்புரம்: கண்டாச்சிபுரம் பேருந்து நிலையத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நடைபெற்ற மாபெரும் தொடர் முழுக்க போராட்டம்!!
விழுப்புரம் மாவட்டம், கண்டாச்சிபுரம் ஊராட்சியில் தென்பண்ணையாற்று குடிநீர் தினசரி வருவதை உறுதிப்படுத்திடவும், தாலுக்கா மருத்துவமனை, 100-நாள் வேலை, சிறுநீரக கழிப்பறை வளாகம் சுகாதாரம், கழிவுநீர் கால்வாய், அனைத்து தெருக்களுக்கும் சிமெண்ட் சாலை, மற்றும் தும்பரமேடு முதல் சீராபாளையம் ஏரி வரை விவசாயிகளில் சாலையை புதுப்பித்தல் பேருந்து நிலையம் முதல் பனமலைப்பேட்டை வரை சாலையை அகலப்படுத்துதல், இந்தியன் வங்கி விரிவாக்கம், நீதிமன்ற வளாகம், பள்ளியில் கூடுதல் ஆசிரியர்கள் நியமனம்,மடவிளாகம்ஆதிதிராவிடர்களுக்கு சுடுகாடு, (மற்றும்) பாதை, அம்பேத்கர்நகர், இந்திராநகர், மடவிளகம், ஆதிதிராவிடர் பகுதிகளுக்கு கணினி பட்டா,போன்ற கோரிக்கைகளை முன்னிறுத்தி,
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டாச்சிபுரம் ஊராட்சி கிளைகள் கண்டாச்சிபுரம் பேருந்து நிலையத்தில் மாபெரும் தொடர் முழக்கப் போராட்டம் நடைபெற்றது.
விழுப்புரம் மாவட்ட செய்தியாளர் விஜய்.

கருத்துகள்
கருத்துரையிடுக