அம்பாரி மகளிர் கல்லூரி சார்பில் போதை விழிப்புணர்வு பிரச்சாரம்!!
ராணி பேட்டை மாவட்டம், அரக்கோணம் வட்டம் தணிகை போளூர் ஊராட்சி கிராமத்தில் அம்பாரி மகளீர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி உள்ளது இக்கல்லூரி மாணவர்கள் சார்பில் போதை பொருட்கள் எதிர்ப்பு விழிப்புணர்வு பிரச்சாரம் அரக்கோணம் நகர காவல்துறை
அலுவலகம் அருகில் நடைபெற்றது. கல்லூரி முதல்வர் பரிமளா தலைமையில் ஒருங்கிணைப்பாளர்கள் உதவி பேராசிரியை, வணிகவியல் துறை ராஜலட்சுமி, உதவி பேராசிரியை கணித்ததுறை பாரதி ஆகியோர் முன்னிலையில் 50க்கும் மேற்பட்ட மாணவிகள் கலந்து கொண்டனர். பிரச்சார பேரணியை நகர காவல் உதவி ஆய்வாளர் துவக்கி வைத்தார் பேரணி மார்கெட் மசூதி வீதி வழியாக பழைய பேருந்து நிலையம் முன்பு நிறைவடைந்தது.
அரக்கோணம் செய்தியாளர் ரவி.


கருத்துகள்
கருத்துரையிடுக