சகோதரத்தவ தினம் காவலருடன் கல்லூரி மாணவர்கள் சந்திப்பு!!

ராணிப்பேட்டை மாவட்டம்,அரக்கோணம் ஸ்ரீ கிருஷ்ணா பாலிடெக்னிக் கல்லூரியின் மாணவ, மாணவிகள் ரக்‌ஷா பந்தன் (சகோதரத்துவ நாள்) விழாவை முன்னிட்டு, மாவட்ட காவல் துணைக்  கண்காணிப்பாளர். அலுவலகத்தில்

காவல் பணியில் அயராது செயல்பட்டுக் கொண்டிருந்த காவலர்களுக்கு தங்கள் அன்பையும் நன்றியையும் வெளிப்படுத்தும் வகையிலும் சமூகப் பொறுப்புணர்வுடன் காவல் துறை சார்ந்த  காவலர்களின் சேவையை மதிக்கும் மனப்பாங்கையும் பிரதிபலிக்கும் வகையிலும்ராக்கி கயிறு கட்டி, இனிப்புகள் வழங்கி  மகிழ்வித்தனர். இதில் பேராசிரியர்கள், நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்.

அரக்கோணம் செய்தியாளர் ரவி

கருத்துகள்