முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி முன்னிலையில் திமுகவில் இணைந்த கரூர் மாவட்ட பிஜேபி நிர்வாகிகள்!!
கரூர் மாவட்டம்,தமிழ்நாடு தலைநிமிர மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர். மு. க. ஸ்டாலின் அவர்களின் தலைமையே தேவை என்று உணர்ந்து கரூர் மாவட்ட பாஜக பிற்படுத்தப்பட்டோர் அணித் தலைவர்.எம். வசந்தகுமார், மத்திய மாநகர அணி பொதுச் செயலாளர். கார்த்தி, தான்தோன்றி ஒன்றிய பொதுச் செயலாளர். கார்த்தி, தெற்கு நகர மாநகர பொதுச் செயலாளர். ராஜ்குமார், மாவட்ட மகளிர் அணி செயலாளர். ஜெயந்தி, கிழக்கு ஒன்றிய மகளிர் அணி செயலாளர். மலர்விழி மற்றும் கிளை செயலாளர்கள். கோபி, முத்துப்பாண்டி, பாபு, ரமேஷ் ஆகியோர் முன்னாள் அமைச்சரும் கரூர் மாவட்ட திமுக செயலாளர் மற்றும் கொங்கு மண்டல தேர்தல் பொறுப்பாளருமான செந்தில் பாலாஜி அவர்கள் முன்னிலையில் இன்று தங்களை திமுக கழகத்தில் இணைத்துக் கொண்டனர்.
கரூர் மாவட்ட செய்தியாளர் சக்திவேல்.

கருத்துகள்
கருத்துரையிடுக