பண்ருட்டி: பூம்புகாரில் பாமக மகளிர் மாநாடு!!

கடலூர் மாவட்டம்,வருகின்ற ஆகஸ்ட் 10 அன்று பூம்புகாரில் நடைபெறவுள்ள பாட்டாளி மக்கள் கட்சியின் மகளிர் மாநாட்டிற்கான ஏற்பாடுகள் குறித்து நெய்வேலி சட்டமன்றத் தொகுதி பண்ருட்டி தெற்கு ஒன்றியத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கடலூர் வடக்கு மாவட்ட செயலாளர். ஜெகன் தலைமையில் நடந்த இக்கூட்டத்தில், கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்துகொண்டு மாநாட்டுக்கு தேவையான பணிகளை விவாதித்தனர். பாமக நிறுவனர் ராமதாஸின் ஆணைப்படி இந்த மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.

கருத்துகள்