சிதம்பரம்: தமிழ்நாடு சீருடை பணியாளர்கள் தேர்வாணையம் நடத்தும் 2025 சீருடை பணியாளர்கள் தேர்விற்கான அறிவிப்பினை அண்ணாமலை பல்கலைக்கழக வளாகத்தில் முன்புறம் பதாகை வைப்பு!!


கடலூர் மாவட்டம்,தமிழ்நாடு சீருடை பணியாளர்கள் தேர்வாணையம் நடத்தும்- 2025 சீருடை பணியாளர்கள் தேர்விற்கான அறிவிப்பினை அண்ணாமலை நகர் காவல் ஆய்வாளர். அம்பேத்கார் அவர்கள், அண்ணாமலை நகர் பகுதி இளைஞர்கள் மற்றும் பல்கலை மாணவர்கள் பயன் பெறுவதற்காகவும் அண்ணாமலை நகர் காவல் நிலையம் சார்பாக அண்ணாமலை நகர் பல்கலைக்கழக வளாகத்தின் முன்புறம் பதாகை வைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, சீருடைப்பணியில் சேர குற்ற வழக்குகளில் ஈடுபட்டிராத இளைஞர்களுக்கோர் அற்புத வாய்ப்பு என்ற வாசகத்துடன் வைக்கப்பட்டுள்ளது. மாணவர்களும் இளைஞர்களும் ஆர்வமுடன் பார்த்து குறிப்பெடுத்துக்கொண்டு வருகின்றனர்.

கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.

கருத்துகள்