பண்ருட்டியில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் ஏழை எளியவர்களுக்கு இலவச திருமணம் நடத்தி வைத்த நகர மன்ற தலைவர். க.ராஜேந்திரன்!!
கடலூர் மாவட்டம்,மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர். மு. க. ஸ்டாலின் அவர்களின் திராவிட மாடல் ஆட்சியில் இந்து சமய அறநிலையத் துறை சார்பில் ஏழை எளியவர்களுக்கு 4 கிராம் தங்கத் தாலி மற்றும் சீர்வரிசைகள் உடன் இலவச திருமணம் பண்ருட்டி திருவதிகை ஸ்ரீ வீரட்டானேஸ்வரர் திருக்கோவிலில் பண்ருட்டி நகர மன்ற தலைவரும் நகர திமுக கழக செயலாளருமான க. இராஜேந்திரன் அவர்கள் தலைமையில் திருகரங்களால் திருமாங்கல்யத்தை மணமக்களிடம் எடுத்துக் கொடுத்து திருமணத்தை நடத்தி வைத்தார். உடன் கோயில் இன்ஸ்பெக்டர். ஸ்ரீதேவி நகர அவைத் தலைவர். ராஜா நகர துணை செயலாளர் கௌரி அன்பழகன் நகர மன்ற உறுப்பினர்கள். சண்முகவள்ளி, பழனி வார்டு செயலாளர்கள். TR.ராஜி ரங்கநாதன் கோயில் அலுவலர்கள் மற்றும் மணமகள் வீட்டார் உடன் இருந்தனர்.
கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.


கருத்துகள்
கருத்துரையிடுக