திட்டக்குடி: 5 பேர் மீது வழக்கு பதிவு!!
திட்டக்குடி அருகே ஜாய் ஏந்தல் பகுதியை சேர்ந்த மணிகண்டன் இவர் 16 வயது சிறுமியை காதலித்து குழந்தை திருமணம் செய்தார். அதற்கு அவரது தாய், தந்தை, சிறுமியின் தாய், தந்தை ஆகியோர் உடந்தையாக இருந்ததாக தெரிகிறது. தொடர்ந்து அந்த சிறுமியுடன் மணிகண்டன் குடும்பம் நடத்தி வந்த நிலையில் தற்போது அந்த சிறுமி 4 மாத கர்ப்பமாக உள்ளாள். இதையடுத்து சிறுமி சிறுபாக்கம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சைக்காக சென்ற போது, இந்த விவரம் தெரிந்தது. பின்னர் இது பற்றி சிறுமி திட்டக்குடி மகளிர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் மணிகண்டன் உள்பட 5 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.

கருத்துகள்
கருத்துரையிடுக