அரக்கோணம் டவுன்ஹாலில் மூத்த அங்கத்தினர் நினைவாக நடைபெற்ற இலவச நீர்மோர் பந்தல் திறப்பு!!
ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் அரசு மருத்துவமனை எதிரில் டவுன்ஹால் உள்ளது .இங்கு ஒவ்வொரு கோடை காலத்திலும் நீர் மோர் வழங்கப்பட்டு வருகிறது .அந்த வகையில் நேற்று டவுன் ஹாலின் முன்னாள் துணைத் தலைவரும் ,ரோட்டரி சங்க போலியோ பிளஸ் சேர்மனுமான.
ஆர்.வெங்கட்டரமணனின் தந்தையும் இச்சிபுத்தூர் கிராம முன்னாள் மணியமும் டவுன்ஹால் மூத்த அங்கத்தினருமான ராமதாஸ் நினைவாக நீர், மோர் பந்தல் திறக்கப்பட்டது. இந்நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராக தமிழ் படைப்பாளர்கள் சங்க மாவட்ட தலைவர்.கவிஞர். சுந்தராஜ்
கலந்து கொண்டு தொடங்கி வைத்தார் நிகழ்ச்சியில் டவுன்ஹால் கட்டிட பொறுப்பாளர். ரமேஷ் நிதி செயலாளர். பூபதி செயற்குழு உறுப்பினர்கள். ஆனந்தன், தாமோதரன், சரவணன், பார்த்திபன் உட்பட முன்னாள் நகர மன்ற உறுப்பினர். காமேஷ் மற்றும் டாக்டர். அசோக்குமார், வெங்கட் நரசிம்மன், ரகுராமன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
அரக்கோணம் செய்தியாளர் ரவி.
,





கருத்துகள்
கருத்துரையிடுக