கலைஞரின் 102 வது பிறந்த நாளை முன்னிட்டு நடைபெற்ற செம்மொழி நாள் விழா! தமிழக முதல்வர். மு. க. ஸ்டாலின் பங்கேற்பு!!


மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர். மு .க. ஸ்டாலின் அவர்கள் தமிழுக்கு செம்மொழித் தகுதி பெற்றுதந்த முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் பிறந்தநாளான ஜுன் 3-ஆம் நாள் “செம்மொழிநாள் விழா”-வில் 2025-ஆம் ஆண்டுக்கான கலைஞர் செம்மொழித்தமிழ் விருது, செம்மொழி நாள் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்குப் பரிசுகள், அகவை முதிர்ந்த தமிழறிஞர்கள் 5 பேருக்கு உயர்த்தப்பட்ட உதவித் தொகைக்கான ஆணைகள் வழங்கி - 

தமிழ்நாடு அரசின் நான்காண்டு சாதனை மலர் மற்றும் - செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் சார்பில் தயாரிக்கப்பட்ட 2 நூல்களை நேற்று  வெளியிட்ட நிகழ்வில். இந்து சமய அறநிலை துறை அமைச்சர். சேகர்பாபு மற்றும் அமைச்சர்கள் சட்டமன்ற உறுப்பினர்கள் திமுக  நிர்வாகிகள் திரளானோர் கலந்து கொண்டனர்.

கருத்துகள்