தமிழக முதல்வரின் பிறந்தநாளை முன்னிட்டு சென்னை கிழக்கு மாவட்ட திமுக சார்பில் நடைபெற்ற அன்னம் தரும் அமுதக்கரங்கள் நிகழ்ச்சி அமைச்சர். சேகர் பாபு பங்கேற்பு!



மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அவர்களின் 72வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை கிழக்கு மாவட்ட திமுக சார்பில், 365 நாட்களும், நாள் ஒன்றுக்கு 1000 நபர்களுக்கு காலை உணவு வழங்கும் சிறப்புமிகு “அன்னம் தரும் அமுதக்கரங்கள்" மாபெரும் திட்டமானது வெற்றிகரமாக தொடர்ந்து 64வது நாளான இன்று (24.04.2025), கொளத்தூர் மேற்கு பகுதி, 64 மற்றும் 64’அ’ ஆகிய வட்ட கழகத்திற்கு உட்பட்ட ஜி.கே.எம் காலனி 42வது தெரு சந்திப்பு மற்றும் மக்காரம் தோட்டம் ஆகிய இடங்களில் பொதுமக்களுக்கு காலை உணவு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர். சேகர் பாபு அவர்கள் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு அன்னம் வழங்கினார். இதில் திமுக கழக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

கருத்துகள்