கொட்டும் மழையும் பொருட்படுத்தாமல் பணி செய்த காவலர்களை பாராட்டிய ஜெயக்குமார் ஐபிஎஸ்!
கடலூர் மாவட்டம் கடலூர் நகரில் நேற்று 3.4.2025 ந் தேதி (V-Squre Mall) அருகில் உள்ள நான்கு முனை சந்திப்பில் பள்ளி மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்கள் விரைந்து பள்ளிக்கும், வேலைக்கும் செல்வதற்கு கொட்டும்
மழையை பொருட்படுத்தாமல் சாலையில் நின்று போக்குவரத்து ஒழுங்குபடுத்தும் பணியில் சிறப்பாக பணி மேற்கொண்டதற்கு பொதுமக்களின் பாராட்டை பெற்ற கடலூர் போக்குவரத்து காவல் நிலைய முதல் நிலை காவலர்கள். மரிய சார்லஸ் மற்றும் ஜெகதீசன் ஆகியோர்
காவல்துறைக்கு நற்பெயரை ஏற்படுத்தி, சிறப்பாக பணிபுரிந்தமைக்காக கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் S. ஜெயக்குமார் IPS அவர்கள் பாராட்டி நற்சான்று மற்றும் பரிசு வழங்கி பாராட்டினார்.
கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்



கருத்துகள்
கருத்துரையிடுக