புதுச்சேரி அரசு கல்வித்துறை சார்பில் நடைபெற்ற நீட் பயிற்சி முகாம் துவக்க விழா அமைச்சர். நமச்சிவாயம் பங்கேற்பு!


புதுச்சேரி அரசு கல்வித்துறை சார்பில் நடைப்பெற்ற NEET பயிற்சி முகாம் துவக்க விழா ஜீவானந்தம் அரசு பள்ளியில் நடைப்பெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளர்களாக பள்ளி கல்வித்துறை மற்றும் உள்துறை அமைச்சர். நமச்சிவாயம் மற்றும் புதுச்சேரி சட்டமன்ற உறுப்பினர். ஜான் குமார் அவர்கள் கலந்து கொண்டு விழாவினை துவக்கி வைத்து சிறப்புரையாற்றினர். 

மேலும் பயிற்சி மையங்களாக ஜீவானந்தம் அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளியில் மாணவர்களுக்கு ஒரு மையமும் மாணவிகளுக்கு ஒரு மையம் என இரண்டு மையங்கள் கண்ணகி அரசு பெண்கள்  மேல்நிலைப் பள்ளி வில்லியனூர் ஒரே மையம் கலைஞர் 

கருணாநிதி அரசு மேல்நிலைப்பள்ளி மதகடிப்பட்டு  ஒரே மையம் என மூன்று பள்ளிகளில் நான்கு மையங்கள் உருவாக்கி 500க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு நீட் பயிற்சி வகுப்பு  நடைபெறுகிறது. இவ்விழாவில் மாணவ மாணவியர்கள்  மற்றும் வழிகாட்டி ஆசிரியர்களும் கலந்து கொண்டனர்.

கருத்துகள்