கடலூர் அருகே பேருந்து விபத்து பயணிகள் காயம்!


கடலூர் மாவட்டம் சிதம்பரம் சாலை ஆலப்பாக்கம் பகுதியில் சென்னையிலிருந்து சிதம்பரம் நோக்கி சென்ற பேருந்தும், சிதம்பரத்தில் இருந்து கடலூர் நோக்கி சென்ற பேருந்தும் இரு பேருந்துகள் மோதி விபத்துக்குள்ளானது. இவ்விபத்தில் பேருந்தில் பயணித்த 30 பயணிகள் படுகாயம் அடைந்துள்ளனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன் 

கருத்துகள்