கடலூரில் நத்தப்பட்டு ஊராட்சியில் பொதுப் பாதையை அகற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாவட்ட ஆட்சியரிடம் பொதுமக்கள் புகார் மனு!




கடலூர் மாவட்டம் நத்தப்பட்டு ஊராட்சியைச் சார்ந்த ஸ்ரீ பத்மாவதி நகர், கிருஷ்ணசாமி நகர், முத்தையா நகர், அருள்தாஸ் நகர் குடியிருப்போர் நலச் சங்கத்தின் நிர்வாகிகள் கடலூர் அனைத்து குடியிருப்பு நலச் சங்க கூட்டமைப்பின் தலைவர் M. மருதவாணன் அவர்களை வெளிச்சம் மண்டலம் வீட்டு வசதி வாரிய குடியிருப்புக்கு அருகில் உள்ள  பொதுமக்கள் பயன்பாட்டில் உள்ள பாதையினை வீட்டு வசதி வாரிய உதவி 


பொறியாளர் மூலம் புல்டோசர் வைத்து  பாதையை பொதுமக்கள் பயன்படுத்தாமல் தடுத்து நிறுத்தியதை இன்று பார்வையிட்டார்கள், உடன் தலைவர் பேரா. விஷ்ணு தாசன், செயலாளர் கவிஞர் ம.ரா.சிங்காரம், பொருளாளர் ஆசிரியர் சீனு.தியாகராஜன், ஆசிரியர் ஜெயராமன், தனராஜ் ஆகியோர் இது குறித்து மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.

கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்

கருத்துகள்