புவிசார் குறியீடு - விவசாயிக்கு வாழ்த்து!
பண்ருட்டி பலாப்பழத்திற்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டது. பண்ருட்டி பலாவிற்கு புவிசார் குறியீடு வழங்க வேண்டும் என்று பல ஆண்டுகளாக கோரிக்கை வைத்து புவிசார் அங்கீகாரம் பெற காரணமான பலா விவசாயியும், பண்ணுருட்டி திருவள்ளுவர் முத்தமிழ்ச்
சங்க பொறுப்பாளருமான பெரியவர்.சௌ. ராமசாமி அவர்களை நகர மன்ற தலைவர் திரு.க ராஜேந்திரன் அவர்கள் பொன்னாடை போர்த்தி வாழ்த்தினார், சங்க கௌரவத் தலைவர் முனைவர் இரா. சஞ்சீவிராயர், செயல் தலைவர் முனைவர் .ராஜா ஆ . ஆட்சி
மன்ற குழு தலைவர், நல்லாசிரியர் புலவர்.ரத்தின ஆறுமுகம் பண்ருட்டி அரசு மேல்நிலைப்பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழக துணைத் தலைவர் வீ. லோகநாதன் மற்றும் பண்ருட்டி அரசு மேல்நிலைப்பள்ளி, பள்ளி வளர்ச்சி குழு துணை தலைவர் ஈ. பழனி ஆகியோர் உடன் இருந்தனர்.
கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்



கருத்துகள்
கருத்துரையிடுக