ஹைதராபாத் மாநகராட்சியில் ஜவஹர் நகரில் உள்ள குப்பை கழிவுகளை எரிபொருளாக மாற்றும் ஆலையின் செயல்பாடுகளை நேரில் பார்வையிட்ட சென்னை மேயர். பிரியா!
தெலுங்கானா மாநிலம், பெருநகர ஹைதராபாத் மாநகராட்சியில் ஜவஹர் நகரில் உள்ள குப்பை கழிவுகளை எரிபொருளாக மாற்றும் ஆலையின் (Waste to Energy Plant) செயல்பாடுகளைப் பெருநகர சென்னை மாநகராட்சி மாண்புமிகு மேயர் ஆர். பிரியா அவர்கள் தலைமையிலான குழுவினர் பார்வையிட்டார்கள்.
இந்நிகழ்வில், துணை மேயர் மு மகேஷ் குமார் ஆணையர் ஜெ. குமரகுருபரன், இ.ஆ.ப., கூடுதல் ஆணையர் (சுகாதாரம்) வி. ஜெய சந்திர பானு ரெட்டி, இ.ஆ.ப., தாம்பரம் மாநகராட்சி ஆணையர் சீ. பாலச்சந்தர், இ.ஆ.ப., நிலைக்குழுத் தலைவர் (சுகாதாரம்) டாக்டர் கோ. சாந்தகுமாரி, மாமன்ற உறுப்பினர்கள் சு. ஜீவன், ஜெ. டில்லிபாபு ஆர். ஜெயராமன், எம். ரேணுகா, ந. அதியமான், மோ. குணசுந்தரி, டாக்டர் பூர்ணிமா மற்றும் பெருநகர சென்னை, ஹைதராபாத் மாநகராட்சி அலுவலர்கள் பங்கேற்றனர்.


கருத்துகள்
கருத்துரையிடுக