கோவை- மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் குடமுழுக்கு ஏற்பாடுகளை பார்வையிட்ட அமைச்சர். செந்தில் பாலாஜி!


கோவை மாவட்டம் அனைவருக்கும் அனைத்தும் கிடைத்திட வேண்டும், சமத்துவமான தமிழ்நாடு அமைந்திட வேண்டும் என்ற உன்னத எண்ணத்தில், திராவிட மாடல் நல்லாட்சி புரியும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அவர்களின் பொற்கால 

ஆட்சியில் நாளை நடைபெறும்,  அருள்மிகு மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் குடமுழுக்கு ஏற்பாடுகளை பார்வையிட்டு, அங்கு நடைபெறும் அன்னதான நிகழ்வை மின்துறை மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைதுறை அமைச்சர். செந்தில் பாலாஜி அவர்கள் கலந்து கொண்டு துவக்கி வைத்தார். 


கோவை மாவட்டத்தின் பெருமைகளில் ஒன்றான அருள்மிகு மருதமலை சுப்பிரமணியசுவாமி திருக்கோவில் குடமுழுக்கு விழாவில் கோவை மக்கள் அனைவரும் பங்கு பெற அன்புடன் அழைக்கிறேன் என அமைச்சர். செந்தில் பாலாஜி அழைப்பு.

கருத்துகள்