மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்தில் 32 புதிய மகளிர் விடியல் பேருந்துகளை மக்கள் பயன்பாட்டிற்கு கொடியசைத்து துவக்கி வைத்த அமைச்சர். பழனிவேல் தியாகராஜன்!
மதுரை மாட்டுதாவணி பேருந்து நிலையத்தில், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களின் உத்தரவின்படி, மதுரை கோட்ட போக்குவரத்துக் கழகத்தில் சார்பில் 32 புதிய மகளிர் விடியல் பயண நகர பேருந்துகளை மாண்புமிகு வணிகவரித்
துறை அமைச்சர் அண்ணன் பி மூர்த்தி அவர்கள், மாண்புமிகு தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர். பழனிவேல் தியாகராஜன் அவர்களுடன் கொடியசைத்து மக்கள் பயன்பாட்டிற்கு துவக்கி வைத்தனர்.
உடன் மாவட்ட ஆட்சித் தலைவர், சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன், மாநகராட்சி மேயர், மதுரை கோட்ட மேலாண் இயக்குனர்,உள்ளாட்சி பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள், கழகத் தோழர்கள், தொமுச நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
மாவட்ட செய்தியாளர் சக்திவேல்



கருத்துகள்
கருத்துரையிடுக