பொள்ளாச்சி - வடக்கிபாளையம் ஊராட்சியில் ரூ. 2.35 கோடி மதிப்பீட்டில் தார் சாலை மேம்படுத்தும் பணிகளை துவக்கி வைத்த அமைச்சர். செந்தில் பாலாஜி!
கோவை மாவட்டம் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அவர்களின் நல்லாசியுடன், பொள்ளாச்சி தொகுதி, வடக்கிபாளையம் ஊராட்சியில் 4 இடங்களில், ரூ.2.35 கோடி மதிப்பில் தார் சாலை மேம்படுத்தும் பணிகளை மின்துறை மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைதுறை அமைச்சர். செந்தில் பாலாஜி அவர்கள் துவக்கி வைத்தார்.
இந்நிகழ்வில், மாண்புமிகு பொள்ளாச்சி மக்களவை உறுப்பினர். கே.ஈஸ்வரசாமி அவர்கள், கோவை மாவட்ட ஆட்சியர். பவன்குமார் ஜி. கிரியப்பனவர் இ.ஆ.ப., கோவை மாநகராட்சி மேயர். ரங்கநாயகி, உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
மாவட்ட செய்தியாளர் சக்திவேல்


கருத்துகள்
கருத்துரையிடுக