கோவில் வழிபாட்டிற்கு வேடசந்தூர் சென்ற இந்து முன்னணி நிர்வாகிகள் 80 நபர் கைது!


07.03.2025 ஆம் தேதி திண்டுக்கல் அபிராமி அம்மன் கோவில் வழிபாட்டிற்கு வேடசந்தூர் சென்று இருந்த இந்து முன்னணி நிர்வாகிகள் பக்தர்கள் பெண்கள் ஆகிய 80 நபர்களை கைது செய்து அராஜக போக்கினை கண்டித்து 8 3 2025 மாலை 5 மணி முதல் 6:30 மணி வரை கடலூர் மஞ்சக்குப்பம் தலைமை தபால் நிலையம் அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

இந்நிகழ்ச்சியில் தலைமை சக்திவேல் வரவேற்புரை இரா வேல்முருகன் மாவட்ட செயற்குழு உறுப்பினர் கண்டன உரை ஆவ சனில் குமார் தமிழ் மாநில செயலாளர் வெங்கடேசன் ரவிச்சந்திரன் மாவட்ட செயற்குழு உறுப்பினர் பெருமாள் மாவட்ட செயற்குழு உறுப்பினர் நன்றி உரை திரு ஜே சிவகுமார் நகர செயலாளர் ஆகியோர் பங்கேற்ற கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அனுமதி மறுக்கப்பட்டதால் கடலூர் புதுநகர் காவல் ஆய்வாளர் அனைவரும் கைது செய்து தனியார் மண்டபத்தில் அடைத்து வைத்தனர்.

கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன் 

கருத்துகள்