கோவில் வழிபாட்டிற்கு வேடசந்தூர் சென்ற இந்து முன்னணி நிர்வாகிகள் 80 பேர் கைது!
07.03.2025 ஆம் தேதி திண்டுக்கல் அபிராமி அம்மன் கோவில் வழிபாட்டிற்கு வேடசந்தூர் சென்று இருந்த இந்து முன்னணி நிர்வாகிகள் பக்தர்கள் பெண்கள் ஆகிய 80 நபர்களை காவல்துறையினர் கைது செய்தனர். இந்த கைது நடவடிக்கை கண்டித்து நேற்று மாலை 5 மணி முதல் 6:30 மணி வரை கடலூர் மஞ்சக்குப்பம் தலைமை தபால் நிலையம் அருகில் இந்த கண்டன ஆர்ப்பாட்டம் சக்திவேல் தலைமையில், இரா. வேல்முருகன் வரவேற்பில் நடைபெற்றது. மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஆ.வ சனில்குமார் அவர்கள் கண்டன உரையாற்றினார்.
இந்த நிகழ்வில் தமிழ் மாநில செயலாளர். வெங்கடேசன், ரவிச்சந்திரன் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள். பெருமாள், நகர செயலாளர். ஜே. சிவக்குமார் நன்றி உரை வழங்கினார். அனுமதி மறுக்கப்பட்டதால் கடலூர் புதுநகர் காவல் ஆய்வாளர் அனைவரும் கைது செய்து தனியார் மண்டபத்தில் அடைத்து வைத்தனர்.
கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்


கருத்துகள்
கருத்துரையிடுக